Saturday 8 March 2014

Kadhal Vadukkal - Chinna Chinna Kavithai

காதல் வடுக்கள்!!!  


நிழலாகிப்போன நிஜங்கள் 
இதயத்தில் சுவடுகளாக... 
அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ 
சொல்ல முடியாத வலியுடன்
 ஒரு சுகம்!

En Kavithaigal

வாழ்க்கை

வாழ்க்கை என்னும் கூட்டிலே .................
சுதந்திரம் இல்லாமல் சுற்றி திரிகிறேன் ............
என்றுதான் வெளி உலகம் காணுமோ .......
இந்த பறவை....
கடவுளுக்கே வெளிச்சம் ........... 


கடைசி சந்திப்பு

நேரில் பார்த்து பேசாத
நாட்களை விடவும்,..

உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..

நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..

Kathal Kavithaigal Pala

En kadhal kooda 

Nilavatra vaanam than...

En kadhalai

Aval
Earka marukum varai....


சில "நிமிடங்களுக்காக"...!
சில "நிமிடங்களுக்காக"...!
வார்த்தைகளுக்கு
வறுமையில்லை.
இருப்பினும்,
காத்திருக்கின்றேன்...
கவிதையெழுத.
நீ... எனை
கடந்து செல்லும்
அந்த சில
"நிமிடங்களுக்காக"...!

Varungaal India Kavithai


Future India  :

அன்னையை ஒட்டி
நின்ற என்னை
எட்டி நிற்கச் சொல்லி;
வாசலுக்கு வருகைப்
போடச் சொன்னாள்!

ஒலிப்பெருக்கியின் 

ஓசையைக் கேட்டதும்;
ஓடி வா;
எங்கிருந்தாலும் என்னைத்
தேடிவா என்றாள்!

அலறும் சப்தத்துடன்
 
உயரும் குரலுடன்;
ஓர் வண்டி
என் தெருவை மிதிக்க;
ஓடிச் சென்றேன்;
அன்னையைக் காண!

ஒலிப் புலனை 

ஓங்கி அடித்து;
ஒலிப்பெருக்கியோ
ஒய்யாரமாய் என்
வீட்டில் நிற்க;
வாக்குக் கேட்டு
வரிசையாய் ஓர் கூட்டம்!

அம்மாவிடம் கொடு என;
 
அன்பாய் என் தலைக் கோதி;
மறக்காமல் நம் சின்னம்;
என்று பணத்தைக்
கரத்தில் திணித்து;
பக்கத்து வீட்டுப்
படியேறியது
வெள்ளை ஆடைக் கூட்டம்!

முடிந்தது என் வேலை என்று;
 
அம்மாவின் முந்தாணையில்
முறுக்கிக் கொள்ள;
மெல்ல நகர்ந்தேன்;
அடுப்படிக்கு!

மீண்டும் திருப்பினாள் எனை;
 
அடுத்த வண்டி வரும் போதும்
ஓடி வா;செல்லம் என்று!

வாசலுக்கு விரையும் 

வருங்கால இந்தியா
நான்! 

Tholi




Girls Love And Boys Love Jokes


Tamil Sms Kathal Kavithai

எத்தனை உறவுகள் இருந்தாலும்


நீ மட்டும்

ஒரு நொடி இல்லை என்றால்


நான் ஒரு அநாதைதான். . ♥